புலம்பெயர் தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து!

திருப்பூரில் நடைபெற்ற தமிழ் மொழி கற்போம் திட்ட துவக்க விழாவிற்கு பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், நம் தாய் மொழியை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்ட உன்னத திட்டம் தான் தமிழ் மொழி கற்போம் திட்டம் என தெரிவித்தார்.



திருப்பூர்: புலம்பெயர் தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் மொழி கற்போம் திட்ட துவக்க விழா நடைபெற்றது.



இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,



தமிழ்நாடு முழுவதும் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில் அவர்கள் நம் சகோதரர்கள் போல என்பது வெறும் பேச்சளவில் மட்டுமல்ல.

அவர்களை அரவணைத்து நம் தாய் மொழியை அவர்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்ட உன்னத திட்டம் தான் தமிழ் மொழி கற்போம் திட்டம். நம்மை தேடி நம்மை நாடி வருபவர்களுக்கு அவர்களது தாய் மொழியோடு நம் தாய் மொழியையும் கொடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 71.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. அவர்கள் தாய்மொழி எதுவானாலும் அதனோடு தமிழ் மொழியும் கற்றுக் கொடுக்கப்படும். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது.

பல்வேறு மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பதன் மூலம் மக்கள் அரசு பள்ளிகளை நம்பி வருவதை உணர முடிகிறது. விரைவில் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...