உடுமலையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.185க்கு விற்பனை - இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!

உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், சின்ன வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



திருப்பூர்: உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகின்றது. சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காதது சாகுபடி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் சின்ன வெங்காயம் உடுமலை சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து வருகின்றது. அதாவது கடந்த சில வாரங்கள் முன் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



ஆனால் தற்போது, சந்தையில் இருப்பு வைத்த நன்கு உலர்ந்த வெங்காயம் தரத்திற்கு ஏற்ப ஏலம் முறையில் கிலோ 185 ரூபாய்க்கும், 40 கிலோ பை ரூ.7400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சமையலில் முக்கியமாக கருதப்படும் சின்ன வெங்காயம் அதிரடி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...