உடுமலையில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலையில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஆகிய உபகரணங்கள் Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.


திருப்பூர்: Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உடுமலை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகரில் சிக்கந்தர் பாஷா வீதியில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 2014 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஒரு வருடத்திற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இந்த வருடத்திற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...