உடுமலை அருகேயுள்ள அரசுப்பள்ளியின் சுவரில் விரிசல் - இடிந்து விழும் அபாயம்!

உடுமலை அடுத்த சின்னக் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அபாயம் உள்ளதால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: உடுமலை அடுத்த சின்னக் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிசல் ஏற்பட்டுள்ள் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக் குமாரபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சின்ன குமாரபாளையம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. அப்போது சுற்றுச்சுவரின் அடித்தளம் வலுவற்றதாக அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனால் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விரிசல் விட்டு சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடக்க பள்ளி என்பதால் சுட்டித்தனம் நிறைந்த குழந்தைகளே இங்கு அதிக அளவில் வருகை தருவார்கள். நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளது குழந்தைகள் அறிய மாட்டார்கள்.

அந்த சுவர் கேட்டை திறக்கும் போது அசைந்து கொடுத்து மரத்துடன் சாய்ந்து நின்று கொள்கிறது. எப்பொழுது கீழே விழும் என்று தெரியாது விளையாட்டுத்தனம் நிறைந்த குழந்தைகள் கேட்டை பிடித்து விளையாடும் போதோ அல்லது வெளிப்புறத்தில் சுவருக்கு அருகில் செல்லும் போதோ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. சிறு அலட்சியம் கூட பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்று அதிகாரிகளும் அறிவதில்லை.

எனவே சின்ன குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சேதம் அடைந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...