உடுமலை கல்குவாரிகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு!

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள கல்குவாரிகளில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், உடுமலை, மடத்துக்குளம், பழனி தாலுகாவிலுள்ள குவாரிகளிலிருந்து, கேரளாவுக்கு, தினமும், 200 லோடு, ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம், கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற, 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சச்சின் ஆனந்த் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அனுமதிக்கப் பட்ட அளவை விட, கூடுதலாக, கனிம வளங்கள் ஏற்றியதாக, 9 லாரிகளுக்கும், ரூ.5.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கனிம வளத்துறை உதவி இயக்குனர் சச்சின் ஆனந்த் கூறியதாவது,

சட்டவிரோத கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து, திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் கொடுத்து, குவாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக உள்ள கனிம வளங்கள் பறிமுதல் செய்து, உரிய ஆய்வு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...