கோவையில் நகைக்கடை அதிபரிடம் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி - தம்பதி மீது புகார்!

கோவை ராஜவீதியில் இயங்கி வரும் நகைக்கடை உரிமையாளரிடம் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நகை வியாபாரி ரகுநாத் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன


கோவை: கோவை மாவட்டம் ராஜவீதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 2 கிலோ தங்கம் வாங்கிக் கொண்டு பணம் தராமல் மோசடி செய்ததாக தம்பதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் விநாயகபுரம் அருகேயுள்ள விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (56). இவர் கோவை ராஜவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ரமேஷ் குமாருக்கு கோவை செட்டிவீதியை சேர்ந்த நகை வியாபாரி ரகுநாத் (43) என்பவருடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. ரகுநாத், ரமேஷ்குமாரிடம் நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரமேஷ்குமார் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை ரகுநாத்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நகைகளை வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் ரகுநாத் அதற்குண்டான பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

ரமேஷ்குமார் பலமுறை கேட்டும் அவர் நகை, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், ஏமாற்றமடைந்த நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமார் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரகுநாத் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டதாக ரகுநாத் மனைவி ஸ்ரீலேகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...