ஆலாந்துறையில் பள்ளியின் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது - வீடியோ வைரல்!

ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி அருகே இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசமரம், வலுவிழந்து காணப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் வீசிய காற்றில் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறையில் பள்ளி அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிக்கு அருகிலேயே நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று இருந்து வந்தது.



இந்த அரச மரம் வலுவிழந்து காணப்பட்ட நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணிக்கு மேல் அப்பகுதியில் வீசிய காற்றின் காரணமாக அரசமரம் வேரோடு சாய்ந்தது.



மரம் சாய்ந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து விலகி ஓடினர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கட்சிகள் வைரலாகி வருகிறது.

அதே சமயம் மரம் சாய்ந்தது மதியம் என்பதால் பள்ளி குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...