ஆலாந்துறையில் பள்ளியின் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது - வீடியோ வைரல்!

ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி அருகே இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசமரம், வலுவிழந்து காணப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் வீசிய காற்றில் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறையில் பள்ளி அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிக்கு அருகிலேயே நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று இருந்து வந்தது.



இந்த அரச மரம் வலுவிழந்து காணப்பட்ட நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணிக்கு மேல் அப்பகுதியில் வீசிய காற்றின் காரணமாக அரசமரம் வேரோடு சாய்ந்தது.



மரம் சாய்ந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து விலகி ஓடினர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கட்சிகள் வைரலாகி வருகிறது.

அதே சமயம் மரம் சாய்ந்தது மதியம் என்பதால் பள்ளி குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...