கோவை அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டு!

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த ஜோஸ் கார்டன் பகுதியில் நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்ற நிலையில், அதில் 4 குட்டிகள் சாக்கடைக்குள் விழுந்துள்ளன. அதனை பத்திரமாக மீட்டு அதன் தாயிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகேயுள்ள ஜோஸ் கார்டன் பகுதியில் தெருநாய் ஒன்று எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் அதில் நான்கு குட்டிகள் அங்கிருந்த சாக்கடை ஒன்றிற்குள் விழுந்துள்ளது.

இதனால் தாய்நாய் நீண்ட நேரமாக சாக்கடையை பார்த்து கத்திக் கொண்டிருந்த நிலையில் அதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான முகமது மீரான் உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.



தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அந்த நான்கு குட்டிகளையும் பத்திரமாக வெளியே எடுத்து அதன் தாயுடன் சேர்த்தனர்.



தகவல் அளித்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு சென்று நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...