கோவை அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டு!

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த ஜோஸ் கார்டன் பகுதியில் நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்ற நிலையில், அதில் 4 குட்டிகள் சாக்கடைக்குள் விழுந்துள்ளன. அதனை பத்திரமாக மீட்டு அதன் தாயிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகேயுள்ள ஜோஸ் கார்டன் பகுதியில் தெருநாய் ஒன்று எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் அதில் நான்கு குட்டிகள் அங்கிருந்த சாக்கடை ஒன்றிற்குள் விழுந்துள்ளது.

இதனால் தாய்நாய் நீண்ட நேரமாக சாக்கடையை பார்த்து கத்திக் கொண்டிருந்த நிலையில் அதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான முகமது மீரான் உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.



தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அந்த நான்கு குட்டிகளையும் பத்திரமாக வெளியே எடுத்து அதன் தாயுடன் சேர்த்தனர்.



தகவல் அளித்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு சென்று நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...