கோவை கரும்புக்கடை அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஆசாத் நகர் சேர்ந்த அசனார் சேட் (28), குறிச்சி பகுதியைச் சேர்ந்த மன்சூர் ரஹ்மான் (29) மற்றும் அண்ணா நகரை சேர்ந்த அனீஸ் ரகுமான் (28) ஆகியோரை கைது செய்த போலீசார் மூவரிடமும் இருந்த 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கரும்புக்கடை அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கரும்புக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கரும்புக்கடை ஆசாத் நகர் சேர்ந்த அசனார் சேட் ( 28), மற்றும் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மன்சூர் ரஹ்மான் (29) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் கரும்புகடை அண்ணாநகரை சேர்ந்த அனீஸ் ரகுமான் (28) என்பவருடன் சேர்ந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...