கார் நிறுத்துவதில் தகராறு - கணவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது மனைவி புகார்!

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் அடுக்குமாடி கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி லக்ஷ்மி தேவி இருவரும் குழந்தைகளோடு அப்பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகின்றனர்.

அதே குடியிருப்பில் கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் காசிபாண்டியன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆய்வாளர் காசி பாண்டியன் தனது காரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள “நோ பார்க்கிங்” பகுதியில் நிறுத்தியதாக தெரிகிறது.



இதை பார்த்திபன் தனது செல்போனில் புகைப்படமாக எடுத்து அதை குடியிருப்பு உரிமையாளர்கள் whatsapp குழுவில் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் காசி பாண்டியன், பார்த்திபனுக்கு செல்போனில் அழைத்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசி மிரட்டியதாக தெரிகிறது.

இதனிடையே ஆய்வாளர் தனது குடும்பத்துடன் பார்த்திபனின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கியதாகவும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பார்த்திபன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் பாதிக்கப்பட்ட பார்த்திபனின் மனைவி லட்சுமி தேவி இது குறித்து காவல்துறையில் புகார் எடுக்க மாட்டார்கள் என்பதற்காக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...