ரூட்ஸ் குழுமங்களின் சார்பில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவையில் செயல்பட்டு வரும் ரூட்ஸ் குழும நிறுவனங்களில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ரூட்ஸ் கம்பெனி வளாகத்தினுள் பாதுகாப்பு வாசகங்களின் பேனர்கள் அனைத்து பணியாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பணியாளர்கள் தங்களது பணிகளை துவங்குவதற்கு முன்பு ஒன்றுகூடி பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு தினம் குறித்த சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.



இதன் துவக்க விழாவில் ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் பங்கேற்று பாதுகாப்பு குறித்த கருத்துரை வழங்கினார்.



தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள், விழாவினைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில், சரகம் ஒன்று மற்றும் இரண்டின் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இணை இயக்குநர்கள் பி.என்.சங்கர் மற்றும் எம்.வி.செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, ரூட்ஸ் காஸ்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம் விழாவில் பங்கேற்று பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் சபீனா மற்றும் வந்தே மாதரம் ஏ.மாதவன் ஆகியோர் பங்கேற்று "தொழில்சாலையில் பாதுகாப்பு" என்ற தலைப்பில் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சியினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "தொழிற்சாலையில் பாதுகாப்பிற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது" என்ற தலைப்பில் பணியிடச் சூழலே, பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற இருவேறு கருத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.



இதில், பணியிடச் சூழலே என்ற கருத்தை முன்வைத்து ஆர்.ராஜ்குமார், ஆர்.சுகுமார், எம்.பாரதிராஜா ஆகியோரும், பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற கருத்தை முன்வைத்து எஸ்.டி.செந்தில்குமார், என்.செந்தில்ராஜா, ஆர்.சதீஸ் ஆகியோரும் பேசினர். இப்பட்டிமன்றத்தில் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட்., மற்றும் கோவை உபமண்டலம், தேசிய பாதுகாப்பு குழுமம் உறுப்பினர் துணை மேலாளர் (பாதுகாப்பு) சி.ராஜேஷ்வரன் நடுவராக செயல்பட்டார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...