பீளமேடு அருகே மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்ற ரயில்வே ஊழியர்கள்!

பீளமேடு அருகேயுள்ள வார்டு எண் 26-ல் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ரயில்வே ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: பீளமேடு அருகேயுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

கோவை மாநகராட்சி வார்டு எண் 26-ல் பீளமேடு ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே APJ அப்துல் கலாம் பூங்கா நிர்வாகிகள் சார்பில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி காலை 7 மணிக்கு ரயில்வே தலைவர் சுவாமிநாதன் தலைமையில் விஜயன் செல்வம், மகேஷ் ராஜராஜன் முன்னிலையில் ரயில்வே ஆய்வாளர் தங்கவேல் பீளமேடு ஸ்டேசன் மாஸ்டர் கோமதி ஆகியோர் பரிந்துரை பேரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்றது. 



இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஜி 18 ட்ரஸ்ட் பார்த்திபன் யோகராஜ், பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் பூவே கோபால், வழக்கறிஞர் ஆனந்த், பொன்னுசாமி, சண்முகம், நந்தகோபால், சிவதாஸ், சக்திவேல், சந்திரிகா மற்றும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நடவு செய்தனர்.

இதனையடுத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குப்பையில்லா நகரத்தை உருவாக்க முயற்சி செய்ய குழு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...