பீளமேடு அருகே மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்ற ரயில்வே ஊழியர்கள்!

பீளமேடு அருகேயுள்ள வார்டு எண் 26-ல் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ரயில்வே ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: பீளமேடு அருகேயுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

கோவை மாநகராட்சி வார்டு எண் 26-ல் பீளமேடு ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே APJ அப்துல் கலாம் பூங்கா நிர்வாகிகள் சார்பில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி காலை 7 மணிக்கு ரயில்வே தலைவர் சுவாமிநாதன் தலைமையில் விஜயன் செல்வம், மகேஷ் ராஜராஜன் முன்னிலையில் ரயில்வே ஆய்வாளர் தங்கவேல் பீளமேடு ஸ்டேசன் மாஸ்டர் கோமதி ஆகியோர் பரிந்துரை பேரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்றது. 



இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஜி 18 ட்ரஸ்ட் பார்த்திபன் யோகராஜ், பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் பூவே கோபால், வழக்கறிஞர் ஆனந்த், பொன்னுசாமி, சண்முகம், நந்தகோபால், சிவதாஸ், சக்திவேல், சந்திரிகா மற்றும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நடவு செய்தனர்.

இதனையடுத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குப்பையில்லா நகரத்தை உருவாக்க முயற்சி செய்ய குழு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...