பல்லடத்தில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், பல்லடத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: பல்லடத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு "say no to drugs" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இந்த பேரணியை பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சவுமியா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். 



பல்லடம் நால்ரோடு பகுதியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, காந்தி ரோடு வழியாகச் சென்று அரசு கல்லூரி அருகே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. 



இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். 

இந்த விழிப்புணர்வு பேரணியில், டாக்டர்கள் ராஜ்குமார், ராமசாமி, காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், சரஸ்வதி, பர்வீனா பானு, மற்றும் போலீசார், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...