துடியலூரில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதைப்பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் அறிவுறுத்தல்படி நடைபெற்ற இந்த பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். 



இந்த பேரணியானது துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கி வடமதுரை, துடியலூர் காவல் நிலையம், சந்தை பகுதி வழியாக மீண்டும் பேருந்து நிறுத்தம் வந்தடைந்தது. இந்த பேரணியின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். 



மேலும் பொதுமக்களிடம், போதை பழக்கத்தால் உடல் நலம், மன நலம், குடும்ப நலம், சமூக நல பாதிப்புகள் மற்றும் தொழில், பொருளாதார பாதிப்புகள் ஏற்படுதாகவும், சட்டப்பிரச்சனைகள் வருவதாகவும் கூறி போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்தான நோட்டீஸ்களையும் விநியோகம் செய்தனர். 

இந்த பேரணியில் துடியலூர் சிறப்பு துணை ஆய்வாளர்கள் சரவணன், சின்னராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி என்.எஸ்.எஸ் தலைவர் கேசவசாமி, என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் மாரியப்பன், ஜெயபிரகாஷ், ஸ்ரீஜா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் கார்த்தி, வினோ, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு இயக்க ஆசிரியர்கள் பூபால்ராஜ், வெங்கடேஷ், சந்தோஷ், அசோக் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...