ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுகிறது - ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு

தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு விடப்படுவதால் பல குற்ற சம்பவங்கள் நடப்பதோடு வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.



திருப்பூர்: சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆல்ட்ராக் ஓட்டுநர் உரிமையாளர் நலச் சங்கத்தின் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த போக்கு அதிக அளவில் உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு கொடுப்பதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.

இதனால் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாவிட்டால், வாடகை வாகனங்களாக பதிவு செய்யப்பட்டதை சொந்த வாகனங்களாக மாற்றி கொடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...