ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுகிறது - ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு

தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு விடப்படுவதால் பல குற்ற சம்பவங்கள் நடப்பதோடு வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.



திருப்பூர்: சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆல்ட்ராக் ஓட்டுநர் உரிமையாளர் நலச் சங்கத்தின் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த போக்கு அதிக அளவில் உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு கொடுப்பதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.

இதனால் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாவிட்டால், வாடகை வாகனங்களாக பதிவு செய்யப்பட்டதை சொந்த வாகனங்களாக மாற்றி கொடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...