கடிதம் எழுதிய கோவை சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கோவையை சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் ஜெய் பிரணவ் என்ற சிறுவன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், பல்வேறு பணிகளுக்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவனை பாராட்டியதுடன், அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார்.



கோவை: தனக்கு கடிதம் எழுதிய கோவையை சேர்ந்த சிறுவனை பாராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார். 



கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்த ஜெய் பிரணவ் என்ற 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில் தனக்கு பதில் அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 



இந்நிலையில், பல்வேறு பணிகளுக்காக இன்று கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுவன் ஜெய் பிரணவுடன் சிற்றுண்டி அருந்தினார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார். பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது, அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அந்த பதிவில் சிறுவன் எழுதிய கடிதம் மற்றும் சிறுவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...