கடிதம் எழுதிய கோவை சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கோவையை சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் ஜெய் பிரணவ் என்ற சிறுவன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், பல்வேறு பணிகளுக்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவனை பாராட்டியதுடன், அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார்.



கோவை: தனக்கு கடிதம் எழுதிய கோவையை சேர்ந்த சிறுவனை பாராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார். 



கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்த ஜெய் பிரணவ் என்ற 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில் தனக்கு பதில் அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 



இந்நிலையில், பல்வேறு பணிகளுக்காக இன்று கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுவன் ஜெய் பிரணவுடன் சிற்றுண்டி அருந்தினார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார். பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது, அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அந்த பதிவில் சிறுவன் எழுதிய கடிதம் மற்றும் சிறுவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...