உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் - எஸ்.பி. பங்கேற்பு!

போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்டம் எஸ்.பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கலைக்கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, இன்றைய காலத்தில் போதை பொருள் பழக்கத்தால் பல்வேறு இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். வாழ்வில் முன்னேற்றம் அடையாமல் பல இளைஞர்கள் தடம் மாறி உள்ளனர்.



போதை பொருள் என்னும் பழக்கம் இன்றைய இளம் தலைமுறைகளை அதிகளவு பாதித்தது என்பது குறிப்பிடலாம். ஆகையால் இனி வரும் காலங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இறுதியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 



நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர்கள் ராஜ் கண்ணா மற்றும் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...