விசாரணை கைதியாக 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள கணவர் - ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்த மனைவி!

கோவையை சேர்ந்த சுலைமான் என்பவரை குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து 10 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் வைத்துள்ள நிலையில், வழக்கில் விசாரணையும் நடத்தாமல், ஜாமீனிலும் விடுவிக்காமல் இருப்பதாகவும் கூறி உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது மனைவி பாத்திமா ஸ்ட்ரெச்சரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை: விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை 10 ஆண்டுகளாக வெளியிடவில்லை என்றும் வழக்கை விரைவாக நடத்தி கணவரை விடுதலை அல்லது ஜாமீனில் விட வேண்டும் என்று வலியுறுத்தி உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான் என்பவர் குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இதனிடையே கணவர் வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை நெடுநாட்களாக சிறையில் வைத்திருப்பதாகவும், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது சுலைமானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாத்திமா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்தார்.

இது குறித்து பாத்திமா கூறியதாவது, எனது கணவர் சுலைமான் மீது வழக்கு பதிவு செய்யாமலேயே கடந்த பத்து வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கோவையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்டவரை இதுவரை வெளியில் விடாமல், வழக்கும் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையாக இருக்கிறேன். எனது கணவரை குறைந்தபட்சம் ஜாமீன் கொடுத்தாவது வெளியே அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பாத்திமா வலியுறுத்தினார்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...