பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் - தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு கூறுவது என்ன?

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, அவருடன் பெண் நடத்துனரை பணியமர்த்த வேண்டாம் என்று கூறியதாகவும், பெண் நடத்துனரை பணியமர்த்தியது பிடிக்காமல், தாமாக வந்து வேலை விட்டு செல்வதாக கூறினார் என தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு தெரிவித்துள்ளார்.



கோவை: பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவை நாங்கள் சஸ்பெண்ட் செய்யவில்லை, அவராகவே தான் வேலையை விட்டு சென்றார் என தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு தெரிவித்துள்ளார். 

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் குறித்து மேனேஜர் ரகு கூறியதாவது, 

மூன்று மாதமாக ஷர்மிளா பேருந்தை இயக்கி வருகிறார். வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை. மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு பெண் நடத்துனர் அவர்களாகவே வந்து சேர்ந்தார். ஷர்மிளா எந்த பெண் நடத்துனரையும் தன்னுடன் பணியில் அமர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். 

அவர் ஓட்டும் பேருந்தில் ஒரு பெண் நடத்துனரை பணியில் அமர்த்தினேன். பெண் நடத்துனரை அமர்த்தினார் என் பாப்புலாரிட்டி போய்விடும் என என்னிடம் ஷர்மிளா பேசினார். அனைவருக்கும், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். 

இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஷர்மிளா வேலைக்கு வரவில்லை. காரணம் கேட்ட போது பெண் நடத்துனரை வேலைக்கு எடுத்ததால், அவர் கடந்த வியாழக்கிழமை பணிக்கு வரவில்லை என மற்ற பணியாளர்கள் என்னிடம் சொன்னார்கள். 

இன்று கனிமொழி எம்.பி. வந்ததால் அவர் பணிக்கு வந்தார். அவர் இறங்கியவுடன் ஷர்மிளாவும் இறங்கி விட்டார். ஷர்மிளாவின் புகழ் குறைந்து விடக்கூடாது என்பதால் பிரச்சனை செய்வதாக தெரிவித்தார்.

நான் வேறொரு ஓட்டுநரை அனுப்பி பேருந்து சோமனூர் போய்விட்டு திரும்பி வரும்போது ஷர்மிளா ஏறி அலுவலகம் வந்தார். வந்தவர் நான் வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டு போய்விட்டார். நாங்கள் வேலைக்கு வரவேண்டாம் என சொல்லவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...