கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா பணியிடை நீக்கம்!

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்யதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கோவை: கோவையின் முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஷர்மிளா கூறியதாவது, 







காலையில் கனிமொழி எம்பி என்னை பார்ப்பதற்காக வந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு தான் பேருந்தில் பயணம் மேற்கொண்டார், இந்நிலையில் பேருந்தில் இருந்த பெண் நடத்துனர் மனம் வருத்தப்படும்படி அவரிடம் பேசினார். அப்போது நான் அவரிடம் இவ்வாறு பேச வேண்டாம் என்று தெரிவித்தேன். 

இது குறித்து எனது முதலாளியிடம் தெரிவிக்கும்போது உனது பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருவரையும் அழைத்து வருகிறாய் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கனிமொழி பேருந்தில் வரும் விஷயமே தங்களுக்கு தெரியாது என்று முதலாளி கூறுகிறார் ஆனால் கனிமொழி வருவது குறித்து நான் ஏற்கனவே அவரிடமும் மேனேஜரிடமும் தெரிவித்திருந்தேன். 

இந்த வாக்குவாதம் நிகழும் போது எனது அப்பாவும் உடன் இருந்தார். அப்போது எனது அப்பா கோபத்தில் நான் பைத்தியக்காரனா என்று வார்த்தை விடவே ஓனர் உனது பிள்ளையை அழைத்துக் கொண்டு போ என்று எனது தந்தையிடம் கூறினார். எனவே நாங்கள் வருகிறோம் என்று கூறிவிட்டு வந்து விட்டோம். 

எப்போதும் எனக்கு ஆதரவாக பேசுபவர் இன்று எனக்கு எதிராக பேசியது மன வருத்தத்தை அளித்தது. வானதி சீனிவாசன் சொல்லாமலேயே வந்தார் ஆனால் கனிமொழி கூறிவிட்டு வந்தார். ஒரு ஓட்டுநரின் நிலைமை இதுதான் என்பதுதான் எனது மனதில் உறுத்தி கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...