துடியலூரில் முறையான குடிநீர் வழங்க கோரிக்கை - ஊராட்சி அலுவலகம் முற்றுகை!

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல்காந்தி நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓரிரு நாளில் குடிநீர் விநியோக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கோவை: துடியலூர் அடுத்த குருடம்பாளையம் அருகே முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல் காந்தி நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் சண்முகம் அப்பகுதியில் கால்வாய் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும் என தெரிவித்ததைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...