துடியலூரில் முறையான குடிநீர் வழங்க கோரிக்கை - ஊராட்சி அலுவலகம் முற்றுகை!

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல்காந்தி நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓரிரு நாளில் குடிநீர் விநியோக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கோவை: துடியலூர் அடுத்த குருடம்பாளையம் அருகே முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல் காந்தி நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் சண்முகம் அப்பகுதியில் கால்வாய் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும் என தெரிவித்ததைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...