கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சிறுவன் வயிற்றில் வெடிகுண்டு கட்டிவைத்து உள்ளதாக மிரட்டல் விடுத்த போலி வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பீர்முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியில் வசிப்பவர் சுமதி. இவரது செல்போனை வாங்கிய ஒரு நபர், தன் மனைவிக்கு போன் பண்ண வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 

அப்பொழுது அந்த செல்போனை வாங்கி கோயம்புத்தூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த அந்த நபர், தான் சிறுவனின் வயிற்றில் வெடி குண்டை கட்டி வைத்திருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கின்றார்.

உடனடியாக மாநகர போலீசார் அந்த செல்போனுக்கு அழைத்து விவரங்களை கேட்டிருக்கின்றனர். அந்த செல்போனின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு கட்டி வைத்திருப்பதாக சொன்னது, பிரபல டுபாக்கூர் வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பச்சை மிளகாய் என்கிற பீர் முகமது என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். மதுபோதையில் சுமதி என்ற பெண்ணிடம் இருந்து, அலைபேசியை வாங்கி மனைவிக்கு போன் செய்வதாக தெரிவித்துவிட்டு, போலீசாருக்கு போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பி இருக்கும் பீர் முகமது, இவ்வாறு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். 

கடந்த காலங்களில் இதேபோன்று பலமுறை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு போனில் அழைத்து வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டானது விரைவில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடும் நபர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...