சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகளை உருவாக்க புரூக்ஃபீல்டு பெண்கள் வொண்டர் மன்றம் பயிற்சி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புரூக்ஃபீல்டு வனிக வளாகம் சார்பில் புரூக்ஃபீல்டு பெண்கள் வொண்டர் மன்றம் என்னும் அமைப்பு சுற்றுச் சூழலுக் தீங்கு ஏற்படுத்தாத பழைய துணிகளைக் கொண்டு பைகள் தயாரிக்கும் பயிற்சியினை வழங்கி வருகிறது.

இதில், சமூக பொறுப்புள்ள பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று துணிகளின் மூலம் பைகள் செய்து பிளாஸ்டிக் பையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.



இந்த பயிற்சிப் பட்டறையியில் மேல்தளம் தோட்ட சித்ரா கிருஷ்ணசாமி பங்கேற்று, துணிகளால் ஆன பைகள் குறித்து அறிமுகம் செய்து பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மக்காத பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து எழிதில் மக்கும் தன்மையுடைய துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.



இப்பயிற்சிப் பட்டறையின் இடையே கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் துணிகாள் பைகள் செய்யும் பயிற்சி வகுப்பிற்கு வந்து, பயிற்சி மேற்கொண்டிருந்தோரிடம் துணி பைகள் குறித்தும், இதனை தயாரிக்கும் கலைகள் குறித்தும் எடுத்துக்கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து, இதுபோன்ற முயற்சிகள் மூலம் கோவை மாநகரத்தில் பிளாஸ்டிக் பைகளின் பையன்பாட்டை படிப்படியாக குறைக்க முடியும் என்றும், மக்கள் தங்களது தேவைகளுக்கு பிளாஸ்ட்டிக் பைகளைத் தவிர்த்து துணிப் பைகளையே பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் க.விஜயகார்த்திகேயன் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற இதன் இரண்டாம் நாள் அமர்வில் மை சாப்பிங் மை பேக் அமைப்பினர் பங்கேற்று துணிகளால் ஆன பைகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என பயிற்சி அளித்தனர். 

இந்நிகழ்வில் பிளாஸ்டிக் பையினால் வரும் தீமைகள் குறித்தும், பொருட்கள் வாங்கச் செல்லும் போது தாங்களே தயாரித்த துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, பழைய துணிகள், காட்டன் புடவை, போர்வை உள்ளிட்ட துணிகளைக் கொண்டு எவ்வாறு பைகள் தயாரிக்க வேண்டும் என்று செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.



இதில், கத்தரிக்கோள், ஊசி மற்றும் பழைய துணியினைக் கொண்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவமைப்பிலான பைகளை செய்வது குறித்தும், ஊசி பயன்படுத்தாமலும், கையினால் முடிச்சு போட்டே பைகளை தயாரிப்பது குறித்தும்  பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், இது விழிப்புணர்வு நிகழ்வு மட்டுமே அல்லாமல் இந்நிகழ்வின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட கருத்துகளும் பங்கேற்பாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இதில் பங்கேற்ற பெண்கள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான பைகளை தயாரித்து நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பெரும் பகுதி மக்களிடையே கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் உரையாடப்பட்டது. இந்த முயற்சியின் மூலமாக "பிளாஸ்டிக் பைகள் இனி வேண்டாம், மாசு ஏற்படுத்தாத துணி பைகளே வேண்டும்" என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த முயற்சி சமூகத்தில், சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இதன் ஒருங்கிண்ப்பாளர் தெரிவத்தார்.

இன்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையினைத் தொடர்ந்து பெண்கள் வொண்டர் அமைப்பினர் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்தான நிகழ்ச்சியினை மார்ச் 7ம் தேதியன்று நடத்தவுள்ளதாகவும், இதில் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பங்கேற்பார் என்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...