பல்லடம் நகராட்சித் தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழல் - 7 திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் போர்க்கொடி!

பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 உறுப்பினர்களில் 7 திமுகவினர் உட்பட 10 பேர் தங்களது வார்டுகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் புறக்கணிப்பதாகவும், நகராட்சியில் டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் கூறி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக பல்லடம் நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



திருப்பூர்: பல்லடம் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தலைவராக கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நகராட்சி தலைவர் கவிதாமணி என்பவர் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.



இந்நிலையில் பல்லடம் நகராட்சி ஆணையரிடம், திமுக உறுப்பினர்கள் 7 பேர் உட்பட 10 கவுன்சிலர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.



அதில், தங்களது வார்டுகளுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை கட்டமைப்புகளும் செய்யாமல், மக்களிடம் தங்களை மிகுந்த அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கமிஷன் காரணமாக டெண்டர் மாற்றம் செய்ய கவுன்சிலர்களிடம் கவனத்தை மாற்றி கையெழுத்து பெற்றதாகவும் இதனால் கவுன்சிலர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனால் ஊழல் முறைகேடு நடப்பதாக திமுக கவுன்சிலர்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மாதாந்திர சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டங்கள் என நகர்மன்ற கூட்டத்தை பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் கடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் இன்றி ரகசியமாக நடந்ததற்கு கண்டனம் தெரிவித்தும் 7 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 2 பாஜக கவுன்சிலர்கள் 1 காங்கிரஸ் கவுன்சிலர் என மொத்தம் 18 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...