கோவை குற்றாலம் அருகே சாலையோர கடை மீது வேன் மோதி விபத்து - பழங்குடியின முதியவர் பலியான சோகம்!

விருதுநகரில் இருந்து கோவை குற்றாலம் நோக்கி வந்த மினிவேன் ஒன்று, கோவை குற்றாலம் சோதனை சாவடி அருகேயுள்ள கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கடையில் பொருட்களை வாங்கிய வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை ரங்கன் என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: கோவை குற்றாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கடையின் மீது மோதிய விபத்தில் பழங்குடி கிராம முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சாடிவயல், வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் ரங்கன் (66). கூலி வேலை செய்து வந்த இவர் கோவை குற்றாலம் சோதனைச் சாவடி அருகேயுள்ள ரங்கராஜ் என்பவரது கடையில் பொருட்களை வாங்கச் சென்றார். 



பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்த போது, அவ்வழியாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கோவை குற்றாலத்திற்கு வந்த மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரங்கராஜ் கடையின் முன் பகுதியில் மோதி விட்டு அருகே நின்றுகொண்டிருந்த ரங்கன் மீது மோதியது. 



இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கன் படுகாயமடைந்தார். 



இதையடுத்து அங்கு இருந்தவர்கள் ரங்கனை மீட்டு அருகே உள்ள காருண்யா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

அங்கிருந்த மருத்துவர்கள் ரங்கன் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரங்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காருண்யா நகர் போலீசார், மினி வேன் ஓட்டுநரான விருதுநகர் செட்டிகுறிச்சியை சேர்ந்த விஜய் (24) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆதரவற்ற தனது 18 வயது பேத்தியை கவனித்து வந்த ரங்கன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...