பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சூசகம்!

கோவையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருப்பதால் இதுபோன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யாரென்று பாஜகவுக்கு முதல்வர் தெரியவைப்பார் என்றார்.



கோவை: பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை என்றும், நாங்கள் யாரென்று முதல்வர் பாஜகவுக்கு தெரியவைப்பார் எனவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவையில் ஹோப் கல்லூரி அருகிலுள்ள டைடல் பார்க்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 







கோவைக்கு இன்னும் பல புதிய திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். கோவையில் இன்னும் பல தொழில்கள் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான நிலங்களை தேர்வு செய்து வருகிறோம். 

பிரபல லூலு நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் இன்று அந்த நிறுவனத்தை கோவையில் திறப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் சொன்னார் நாங்கள் திறந்து வைக்கிறோம் என இதுபோன்று சிறுபிள்ளை தனமாக பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க தேவையில்லை. 

மேலும் செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக இதுபோன்று சிறுபிள்ளை தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவை பற்றி இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை. இது போன்ற பல முதலைகளை சந்தித்த இயக்கம் திமுக. 

இந்த அடக்குமுறையிலிருந்து மீண்டும் வலிமையோடு எழுந்து வெற்றி நடைபோடுவோம். திமுகவைக் அடக்க வேண்டுமென்று நினைத்தால் இன்னும் வேகமாக எழுவோம். இதுக்கெல்லாம் பயந்து போகின்ற இயக்கமில்லை. கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. 

பதவியில் இருக்கிறார்கள் என்று சிலர் ஆடுகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் உள்ள துறையை ஏவிவிட்டு இது போன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. முதல்வர் நாங்கள் யாரென்று பாஜகவுக்கு தெரியவைப்பார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...