வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை - கோவையில் பரபரப்பு!

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறை வாகனத்தை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வனத்துறை ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே முகாமிட்டுள்ள யானையை விரட்ட சென்ற வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ஆலாந்துறை அடுத்த கரடிமடை, நரசிபுரம் வழியாக ஒற்றை காட்டு யானை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல தனது வலசை பாதையில் சென்ற ஒற்றை காட்டு யானை ஆலாந்துறை முகாசிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்று டார்ச் விளக்கும், மற்றும் ரோந்து வாகனம் மூலம் கண்காணித்தனர். 



அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெளியே வந்த காட்டு யானை அங்கு வந்த வனத்துறையினர் வாகனத்தை சேதப்படுத்தியது. 



இதில் வனத்துறையினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், வாகனத்தை விட்டு வெளியேறி தப்பிச்சென்ற வனத்துறையினர் மீண்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒற்றை காட்டு யானை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. பலத்த சேதமடைந்த வனத்துறையினர் வாகனம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...