வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை - கோவையில் பரபரப்பு!

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறை வாகனத்தை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வனத்துறை ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே முகாமிட்டுள்ள யானையை விரட்ட சென்ற வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ஆலாந்துறை அடுத்த கரடிமடை, நரசிபுரம் வழியாக ஒற்றை காட்டு யானை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல தனது வலசை பாதையில் சென்ற ஒற்றை காட்டு யானை ஆலாந்துறை முகாசிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்று டார்ச் விளக்கும், மற்றும் ரோந்து வாகனம் மூலம் கண்காணித்தனர். 



அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெளியே வந்த காட்டு யானை அங்கு வந்த வனத்துறையினர் வாகனத்தை சேதப்படுத்தியது. 



இதில் வனத்துறையினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், வாகனத்தை விட்டு வெளியேறி தப்பிச்சென்ற வனத்துறையினர் மீண்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒற்றை காட்டு யானை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. பலத்த சேதமடைந்த வனத்துறையினர் வாகனம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...