கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 20 ஆண்டு சிறை!

கோவையில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கடையின் உரிமையாளரான கனகராஜ் (76) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கோவை: கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 76 வயதான முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் மோர் மிளகாய் வாங்க மளிகை கடைக்கு வந்த 10 வயது சிறுமியை, கடையின் உரிமையாளரான கனகராஜ் (76)  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகி வீட்டிற்கு வந்ததால், அதுகுறித்து விசாரித்தபோது நடந்ததை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கனகராஜை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கனகராஜூக்கு (76) 20 ஆண்டு சிறை தண்டனையும், 20ஆயிரம்  அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம்  நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...