கோவை பேரூர் அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை பேரூர் அருகே புட்டுவிக்கி சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் புலியகுளம் பகுதியை சேர்ந்த நவீன் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 3 கிலோ அளவிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பேரூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பேரூர் சாலை புட்டுவிக்கி அருகே தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, புட்டு விக்கி சாலை கந்தசாமி கவுண்டர் தோட்டம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் நவீன் (25) என்பதும், பெயிண்டர் வேலை செய்து வந்த இவர், தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல் தற்போது வரை தனிப்படை போலீசாரால் இதுவரை போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 347 நபர்கள் மீது 260 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 516 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கண்காணிப்பு வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...