கோவையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் தப்பியோட்டியதால் பரபரப்பு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பசி எடுப்பதாக கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நிலையில், அவரை பிடித்து உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர்.



கோவை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்ற போது காவலர்களிடம் இருந்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரஷ்யா நாட்டை சேர்ந்த நபர் போதை பொருள் வழக்கில் திருச்சி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவையில் உள்ள இன்றியமையாத பண்டகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். 

நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில், பசிப்பதாக கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து திடீரென காவலர்களிடம் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. 



அவரை பின் தொடர்ந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்து சமாதானம் படுத்தினர். 

இந்த சம்பவம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...