கோவையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் தப்பியோட்டியதால் பரபரப்பு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பசி எடுப்பதாக கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நிலையில், அவரை பிடித்து உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர்.



கோவை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்ற போது காவலர்களிடம் இருந்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரஷ்யா நாட்டை சேர்ந்த நபர் போதை பொருள் வழக்கில் திருச்சி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவையில் உள்ள இன்றியமையாத பண்டகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். 

நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில், பசிப்பதாக கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து திடீரென காவலர்களிடம் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. 



அவரை பின் தொடர்ந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்து சமாதானம் படுத்தினர். 

இந்த சம்பவம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...