திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் - பரபரப்பு!

திருப்பூர் குமரன் சாலையில் சாலையை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் அமைத்திருந்த விளம்பரப் பலகைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், அதனை அகற்ற அவகாசம் கொடுத்தும் அகற்றாததால், நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

திருப்பூர் குமரன் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே அவற்றை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததன் காரணமாக இன்று மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.



அப்புறப்படுத்தும் பணியின் போது, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது வணிகர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...