திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் - பரபரப்பு!

திருப்பூர் குமரன் சாலையில் சாலையை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் அமைத்திருந்த விளம்பரப் பலகைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், அதனை அகற்ற அவகாசம் கொடுத்தும் அகற்றாததால், நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

திருப்பூர் குமரன் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே அவற்றை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததன் காரணமாக இன்று மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.



அப்புறப்படுத்தும் பணியின் போது, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது வணிகர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...