பூரண மதுவிலக்கு கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினர்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியினர் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்தும், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியினர் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்தும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி மாநிலம் தழுவிய மதுவிற்கு எதிராக கையெழுத்து பெற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டும் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (TASMAC) மூலம் மதுவிற்பனையை அரசே முன்னெடுத்து நடத்தி வரும் அவல நிலை தொடர்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கிறது. 

டாஸ்மாக் சமூகத்திலும் பல குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையிலும் பெரும் அழிவை உருவாக்குகிறது. பெண்கள் குடும்ப வன்முறை நிதி நிலையின்மை மற்றும் அனைத்து வகையான சீரழிவுகளுக்கும் ஆளாகிறார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 

நகரின் முக்கிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைந்திருப்பதால் மது அருந்தி விட்டு வருபவர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளனர். இதுவரை ஏற்பட்ட டாஸ்மாக் சீரழிவுகளுக்கு அரசு பொறுப்பேற்ற முழுமையான மதுவிலக்கினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்‌. 



மேலும் இதுவரை மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மகளிருக்கும் உரிய வழிகாட்டுதல்களையும் நிவாரணங்களையும் வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...