கோவையில் உள்ள 14 காவல்நிலையங்களுக்கு டேப்களை வழங்கிய காவல் ஆணையர்!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி, காவல்நிலையங்களை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்காக கோவையில் உள்ள 14 காவல் நிலையங்களுக்கு தலா 3 என 42 டேப்களை (Tablet PC) கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களுக்கு தலா 3 டேப்களை (Tablet PC) மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார். 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிக வழக்குகள் பதிவாகும் காவல் நிலையங்களுக்கு இ-பீட் ரோந்து மற்றும் இதர பணிகளுக்காக டேப் (tab) வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 14 காவல் நிலைங்களுக்கு தலா 3 டேப்கள் வழங்கப்பட்டுள்ளது. 



இதனை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,



தற்போது காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இந்த டேப்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 செயலிகள் உள்ளது, அதன் மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கவும், சந்தேகப்படும் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காண இவை உதவும்.

வேறு தனிப்பட்ட விஷயங்களுக்கு டேப் (tab) ஐ பயன்படுத்த முடியாது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானாக்கள், u turn கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 



காற்று மாசுவில் இருந்து போக்குவரத்து காவலர்கள் காக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து பள்ளிகள் முன்பும் நோட்டீஸ்கள் வழங்கி பிரச்சனை என்றால் அணுக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளோம். கல்லூரிகளில் புத்தாக்கம் பயிற்சி நிகழ்ச்சிகளின் போதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன. சிக்னல் இல்லாமல் ரவுண்டாணாக்கள் மாற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலை பிடித்து விட்டோம். புதிய கும்பல்களையும் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...