கோவையில் புகையிலை விற்பனை குறித்து சுகாதாரத்துறை திடீர் சோதனை!

மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம் மற்றும் சீரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில், கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் புகையிலை விற்பனை குறித்து நடைபெற்ற திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சுகாதார துறை சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில் பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மூலம் மலுமிச்சம்பட்டி, ஒத்தக் கால்மண்டபம், சீரபாளையம் பகுதியில் திடீர் சோதனை நடைபெற்றது. 

இதில் நேர்முக உதவியாளர் குமார் மாவட்ட ஆலோசகர் சரண்யாதேவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிராஜன் சமூக பணியாளர் முரளி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கும், பேக்கரி, கடை உரிமையாளர் ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...