கோவை அருகே காதலன் கொலை - காதலி தூக்கிட்டு தற்கொலை!

கோவை செட்டிப்பாளையம் அருகே கடந்த 5ஆம் தேதி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற காதலனை, பெண்ணின் உறவினர் வெட்டிக்கொலை செய்த நிலையில், தனது கண்முன்னே காதலன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விரக்தியடைந்த காதலி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கோவை: கோவை சுந்தராபுரம் அருகே காதலன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (21) இவர் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது வீட்டிற்குச் சென்ற பிரசாந்தை தன்யாவின் உறவினரான விக்னேஷ் (29), என்பவர் வெட்டிக்கொலை செய்தார். 

இதையடுத்து கொலை செய்த விக்னேஷை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக பிரசாந்த் மற்றும் தன்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவர் மட்டும் தனியாக சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து பெரியோர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரசாந்த் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தன்யா மறுநாள் இரவு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் தன்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பினார். 



இந்நிலையில் காதலி கண்முன்னே, காதலன் வெட்டி கொலை செய்யப்பட்டதால் விரக்தியடைந்த காதலி தன்யா நேற்று மாலை 3 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...