கோவையில் நண்பர்களிடையே குடிபோதையில் தகராறு - அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் நண்பர்கள் இருவருக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் கோபிநாத் என்பவர் வெட்டியதில் அழகர்சாமி படுகாயமடைந்தார். இது தொடர்பாக கோபிநாத்தை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாயி என்கிற அழகர் சாமி. இவர் கார் வாட்டர் வாஷ் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் கோழி என்கிற கோபிநாத் இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள ஒரு மதுபான பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபிநாத், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகர்சாமியை தலையில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தகவலறிந்த துடியலூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...