கோவை தடாகம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலியான சோகம்!

தடாகம் அடுத்த நம்பர் 1 நாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரில் குளித்து விளையாடிய ஹரீஸ் (14) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தடாகம் அருகே சட்டவிரோதமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு உத்தரவை மீறி செங்கல் தயாரிக்க தோண்டப்பட்ட சட்ட விரோத பள்ளங்களால் வன விலங்குகள், கனிம வளங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே அங்கு தோண்டப்பட்ட பள்ளங்களையும் வெட்டி எடுக்கப்பட்ட செம்மண்ணை கொண்டு மூடவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நம்பர் 1 நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி இருந்தது.

இந்நிலையில் சாந்திமேடு பகுதியை சேர்ந்த 5 பள்ளி சிறுவர்கள் அந்த குழியில் இருந்த மழைநீரில் குளித்து விளையாடியுள்ளனர். பின்னர் அனைவரும் வெளியே வந்த போது வேல்முருகன் என்பவரது மகன் ஹரீஸ் (14) , நீரில் இருந்த கட்டை ஒன்றை எடுக்க முயன்றதாக தெரிகிறது.



சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக அங்கிருந்த 10 அடி ஆழ நீரில் சிறுவன் மூழ்கியுள்ளார். சக சிறுவர்கள் அங்கிருந்த பெரியவர்களிடம் கூறிய பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவன் ஹரீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதே பகுதியில் வன விலங்குகளின் எச்சமும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் நில உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...