ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்!

கோவை பீளமேடு அருகே யு.டி.எஸ் என்ற நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 4 திட்டங்களில், 76,000-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்த ரூ.1300 கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார்கள் குவிந்த நிலையில், நிறுவன உரிமையாளர் ரமேஷ் (30) கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை: ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த யுடிஎஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை மாவட்டம் சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் பீளமேடு பகுதியில் யு.டி.எஸ்., எனும் நிறுவனத்தை, 2012ம் ஆண்டு துவங்கி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளாவில் கிளைகளை ஏற்படுத்தினார்.

இந்த நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட, 4 திட்டங்களில், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல், ரமேஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக டி.எஸ்.பி., முருகானந்தம் தலைமையில், தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவான ரமேஷ் கடந்த, 6ம் தேதி கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சேலத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்தவர், சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். புகார்கள் குவிந்ததால் தலைமறைவானார். 

இந்நிலையில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அறிந்து அவர் டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கேரளாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளதால், அம்மாநில போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். கோவை போலீசாரும் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

முதலீடு செய்த, 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில், இதுவரை தமிழகத்தில் 50 பேரும், கேரளாவில் 44 பேரும் மட்டுமே புகார் அளித்துள்ளனர். 

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...