பல்லடம் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலம்!

பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் குண்டம் இறங்கும் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வே.கள்ளிப்பாளையம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 34 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோவிலின் குண்டம் இறங்கும் விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து, கிராம சாந்தி நிகழ்வு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்வுகளோடு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இதனையொட்டி, 25 அடி தூரத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டு 2 நாட்களாக மரக்கட்டைகளை எரியவிட்டு தயார்படுத்தப்பட்ட குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தபின் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருளாடியபடி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.



குண்டம் இறங்கிய பக்தர்கள் கருவறையில் உள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மனை வழிபாடு செய்தனர். 



34 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 



குண்டம் இறங்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். 



வே.கள்ளிப்பாளையம் கள்ளக்கிணறு வாவிபாளையம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...