கோவை மாநகராட்சி 15வது வார்டில் நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனை திறப்பு!

கோவை மாநகராட்சி 15வது வார்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனை சுப்பிரமணியம்பாளையம் பெரியார் நகரில் தொடங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாநகராட்சியின் 15வது வார்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கட்டப்பட்ட இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 



தொடர்ந்து 15வது வார்டு கவுன்சிலர் சாந்தமணி பச்சைமுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, இந்த மையத்தின் மருத்துவர் ஹரிணி, கவுன்சிலர் உதவியாளர் சேக் அப்துல்காதர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 



இந்த மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர்கள், மருந்தாளுனர் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இருப்பார்கள் என்றும். அந்த நேரத்தில் நோயாளிகள் மருத்துவர்களை பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மையத்தில் கர்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குடும்ப நலம், நோயாளிகளுக்கான சிகிச்சைகள், பல் நோய்களுக்கான சிகிச்சை, விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட 12 சேவைகள் அளிக்கப்படுகின்றன. 

இதனை சுப்பிரமணியம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மனோஜ், திமுக கட்சி நிர்வாகிகள் பழனிச்சாமி, நடராஜன், ஆறுச்சாமி, சின்னையன், கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், உதவியாளர் அன்பழகன், இளம் பொறியாளர் ஸ்ரீனிவாசன் மகேஷ், தொழில்நுட்ப உதவியாளர் தீபன் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...