ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அதர்வா என்ற 3 வயது சிறுவன் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடியுள்ளார். இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து, சிறுவனுக்கு சான்றிதழும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.



திருப்பூர்: அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ள 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் அதர்வா என்ற மகன் உள்ளார்.



இவர் குழந்தை பருவத்திலேயே பல திறமைகளுடன் வளர்ந்து வருவதை உணர்ந்து கொண்ட இவர்களது பெற்றோர் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்றவற்றை போதித்து வந்தனர். 



இந்நிலையில் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ளார் அதர்வா. இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்துள்ளது. 



இந்த சாதனை அவர்களது பெற்றோருக்கும் மட்டுமின்றி திருப்பூருக்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...