திருப்பூரில் சாய ஆலை நச்சு வாயுவால் குழந்தைகள் பாதிப்பு - எம்.எல்.ஏ, ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள துணிகளை சாயம் ஏற்றும் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளான நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள சாய ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறி குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் மற்றும் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு துணிகளுக்கு சாயம் ஏற்றப்பட்ட பின்பு கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால் நீரிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் நேற்று இரவு முதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பின்பு இன்று காலை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் அப்பகுதியில் உடல் உபாதைக்கு உள்ளான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை தனது வாகனத்தின் மூலம் உடனடியாக தனியார் மருத்துவமனையில் முழு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தார்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் ஆலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கூறியதாவது, முதற்கட்டமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எந்த வித பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் இந்த பகுதி முழுவதுமே உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பந்தப்பட்ட ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையின் கழிவு நீர் மற்றும் சுத்தகரிக்கப்பட்ட நீரினை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவுகள் வரும் வரை ஆலையை தற்காலிகமாக செயல்பட தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...