திருப்பூரில் சாய ஆலை நச்சு வாயுவால் குழந்தைகள் பாதிப்பு - எம்.எல்.ஏ, ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள துணிகளை சாயம் ஏற்றும் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளான நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள சாய ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறி குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் மற்றும் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு துணிகளுக்கு சாயம் ஏற்றப்பட்ட பின்பு கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால் நீரிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் நேற்று இரவு முதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பின்பு இன்று காலை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் அப்பகுதியில் உடல் உபாதைக்கு உள்ளான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை தனது வாகனத்தின் மூலம் உடனடியாக தனியார் மருத்துவமனையில் முழு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தார்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் ஆலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கூறியதாவது, முதற்கட்டமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எந்த வித பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் இந்த பகுதி முழுவதுமே உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பந்தப்பட்ட ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையின் கழிவு நீர் மற்றும் சுத்தகரிக்கப்பட்ட நீரினை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவுகள் வரும் வரை ஆலையை தற்காலிகமாக செயல்பட தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...