கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு - திட்டங்களையும் தொடங்கி வைத்தார்!

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை: கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழகம்‌ திட்டம்‌, பொதுமக்களின்‌ தூய்மை நகரம்‌ திட்டத்தின் கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்கும்‌ தலா 200 மரக்கன்றுகள்‌ வீதம்‌ 1000 மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வழங்கினார்‌.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு 87க்கு உட்பட்ட புட்டுவிக்கி பிரதான சாலையில்‌ ரூ.186 லட்சம்‌ மதிப்பீட்டில் 2200 மீட்டர்‌ தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌,



இதேபோல், கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ பகுதியில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டுமான பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100க்கு உட்பட்ட மேட்டூர்‌ சாலை, நாச்சிமுத்து கவுண்டர்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ |||-ன் கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 405 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...