துடியலூர் எரியூட்டு மயானத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு!

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மாநகராட்சி எரியூட்டு மயானம் துவங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அனுசரிக்கும் விதமாக கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் எரியூட்டு மயான வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை: துடியலூர் எரியூட்டு மயானத்தின் 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை துடியலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பாக எரியூட்டு மயானம் தொடங்கப்பட்டது. இதனை ஈஷா யோகா மைய அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் எரியூட்டு மயானம் ஆரம்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பாக எரியூட்டு மயான வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோக்குமார், கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்மல்குமார், சீனிவாசன், மூர்த்தி, வெள்ளியங்கிரி, விஜயகுமார், கார்த்தி, சக்திவேல், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...