துடியலூர் எரியூட்டு மயானத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு!

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மாநகராட்சி எரியூட்டு மயானம் துவங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அனுசரிக்கும் விதமாக கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் எரியூட்டு மயான வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை: துடியலூர் எரியூட்டு மயானத்தின் 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை துடியலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பாக எரியூட்டு மயானம் தொடங்கப்பட்டது. இதனை ஈஷா யோகா மைய அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் எரியூட்டு மயானம் ஆரம்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பாக எரியூட்டு மயான வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோக்குமார், கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்மல்குமார், சீனிவாசன், மூர்த்தி, வெள்ளியங்கிரி, விஜயகுமார், கார்த்தி, சக்திவேல், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...